Freelancer / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் உள்ள 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8360 மெற்றிக் தொன் யூரியா இரசாயன உரத்தை இலவசமாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் புதன்கிழமை (10) சாவகச்சேரி கமநல சேவை நிலையத்தில் ஆரம்பமானது.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம் வழங்கபமடவுள்ளது. இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இந்த திட்டம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இந்த யூரியா உரமானது வரவிருக்கும் பருவமழையின் பயனாக ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவில் 150 விவசாய சேவை மையங்களால் இன்று(10) முதல் வழங்கப்படும்.
2 hours ago
2 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
13 Mar 2026