2025 ஜூலை 09, புதன்கிழமை

'பஸ் சேவைகள் வேண்டும்'

Princiya Dixci   / 2016 நவம்பர் 28 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து, 7.30 மணிக்குப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கிராமப்புறப் பாடசாலைகளின் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் போக்குவரத்துக்காக, பஸ் சேவைகளைப் பணியில் ஈடுபடுத்துங்கள் என பெற்றோர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“நாள்தோறும் மாணவர்கள், ஐந்து கிலோமீற்றர் தூரம் வரை நடந்தே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். நேரத்துடன் பாடசாலையினை ஆரம்பிப்பது என்றால், எமது பிள்ளைகள் போக்குவரத்துச் செய்யக்கூடிய வசதிகள் எவையும் செய்யப்பட்டுள்ளதா? கடந்த காலங்களில் எமது கிராமங்களுக்கான பஸ் சேவைகளை நடத்துங்கள் என, தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்றும் அந்தப் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

“இந்நிலையில், நேரத்துடன் பாடசாலையினைத் தொடங்கும்போது முதலில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தரக்கூடிய வகையில், பஸ் சேவைகளை நடத்துங்கள். குறிப்பாக கிளிநொச்சியின் அக்கராயன், பூநகரி, கண்டாவளையின் கல்லாறு, வட்டக்கச்சி போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், பஸ் வசதிகள் இல்லாததன் காரணமாக, நீண்டதூரம் பாடசாலைகளுக்கு நடந்து செல்கின்றனர்.

“நேரத்துடன் ஆரம்பிப்பதில் பெற்றோர்களாகிய நாம் எதிர்க்கவில்லை. ஆனால், மாணவர்களின் போக்குவரத்துக்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டுகின்றோம்” என, பெற்றோர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .