2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

10 வயது சிறுமியை வன்புணர்ந்து படுகொலை

Editorial   / 2024 பெப்ரவரி 16 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 வயதான சிறுமி ஒருவர் வியாழக்கிழமை (15) இரவு பாலியல் வன்புணர்வுக்கு  உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மன்னார், தலைமன்னார் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தனது  மனைவியுடன் தலைமன்னார் பகுதியில் வசித்து வந்துள்ளனர். கணவன் போதைக்கு அடிமையானவர் என்பதால் அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார் .

இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபர் வியாழக்கிழமை மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அருகில் இருந்த CCTV கெமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம்  வௌ்ளிக்கிழமை (16) அதிகாலை  மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில்  தலைமன்னார் பொலிஸார்   மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரொசேரியன் லெம்பட் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X