2025 ஜூலை 09, புதன்கிழமை

நந்திக்கடலில் மீனவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு சூரியபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் சௌந்தரராஜன் (வயது 37) என்ற மீனவர், முல்லைத்தீவு நந்திக்கடலிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் இறால் பிடிப்பதற்காக நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை நந்திக்கடலுக்கு சென்றுள்ளார்.  தொழிலுக்கு சென்ற இவர்  மறுநாள் முற்பகல் 10 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து,  இளைஞர்கள், மீனவர்கள் இணைந்து நந்திக்கடலில் தேடியுள்ளனர்.

இதன்போது,  நந்திக்கடலில் ஒருபகுதியில் இவர்  பயன்படுத்தும் வலையை தேடுதலில் ஈடுபட்டவர்கள் கண்டுள்ளனர்.  அந்த வலை இருக்கும் இடத்துக்குச் சென்று இவர்கள் தேடியுள்ளனர்.  அவருடைய இரண்டு கால் பகுதிகளும் வலையில் சிக்கியவாறு  நீருக்குள் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

இது தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர்.

இந்த நிலையில்,  சம்பவ இடத்துக்கு  சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி முஹம்மது சம்சுதீன்,  நந்திக்கடலில்  கிடந்த சடலத்தை வெளியே கொண்டுவருமாறு பணித்து,  சடலத்தையும் பார்வையிட்டார்.

இதன் பின்னர் சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .