2025 ஜூலை 09, புதன்கிழமை

தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு

George   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, புதன்கிழமை (22) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு கடற்பரப்பில் முன்னர் அதிகமாகக் காணப்பட்ட இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி தற்போது இல்லை. ஆனால் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் தொடர்கின்றது.

தினமும், சுமார் 120 மீன்பிடி படகுகளில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். இதனால், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர் என்றார்.

அத்துடன், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் சென்று முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .