2025 ஜூலை 09, புதன்கிழமை

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி கடலில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 5 பேருக்கு தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் பூநகரி பொலிஸாருடன் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த 5 மீனவர்கள் வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களின் வலைகளை எரிக்குமாறு நீதவான் நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .