2025 ஜூலை 09, புதன்கிழமை

ரயில் விபத்தில் நீர்பாசன திணைக்களத்தின் வாகன சாரதி காயம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் பிக்கப்ரக வாகனம் மோதுண்டதில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் முருங்கன் நீர்ப்பாசன திணைக்களத்தின் வாகன சாரதியான சிவச்சாமி என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு; முருங்கன் செம்மண் தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .