2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பதவியை கொடுப்பவன் இறைவனே

Sudharshini   / 2015 மே 03 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

பதவியை கொடுப்பவன் இறைவனே. அதை எந்த ஒரு தனி மனிதனாலோ குழுக்களாலோ பறித்தெடுக்க முடியாது. ஏழைக்குடும்பத்தில் பிறந்த எனக்கு அல்லாஹ் இந்த உயரிய பதவியை வழங்கியுள்ளான். அதனை இறைவனுக்கு பொருத்தமான முறையில் பயன்படுத்தி வருகின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிஸாட் பதியூதீன் தெரிவித்தார்.

மன்னார் எருக்கலம்பிட்டியில் சனிக்கிழமை (2) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

நான் மக்கள் பணி செய்வதற்காக கேட்ட உதவிகளையெல்லாம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செய்திருந்தாலும் சமூகத்தின் நன்மை கருதியே மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து தமது கட்சி வெளியேறியது.

மஹிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு தாங்கள் எடுத்த துணிச்சலான முடிவின் காரணமாகவே, அந்த அரசாங்கத்திலிருந்து கட்சிகளும், அமைச்சர்களும் அடுத்தடுத்து வெளியேறி மஹிந்தவின் அரசாங்கத்தை சிதைவடைய செய்தனர்.

எருக்கலம்பிட்டி கிராமம் பல்வேறு வரலாற்று சிறப்புக்களை கொண்டுள்ளது. இந்த கிராமத்தில் பிறந்தவர்களும் இங்கே படித்தவர்களும் இன்று இலங்கையிலும், சர்வதேசத்திலும் கொடிகட்டி பறக்கின்றனர்.

நான் இந்தக் கிராமத்தின் அயல் கிராமமான தாராபுரத்தில் பிறந்த போதும், இந்தக்கிராமத்தின் மீது அன்பும் அபிமானமும் கொண்டவன். என்னிடத்தில் பிரதேசவாதமோ, ஊர்வாதமோ கிடையாது. இந்த கிராமத்திலுள்ள மக்கள் உதவிகள் கேட்ட போதெல்லாம் எந்;தவித பேதமும் பாராது என்னால் முடிந்தவரை உதவியுள்ளேன்.

வாக்குகளை வசீகரிப்பதற்காகவோ அல்லது எனது சொந்த தேவைக்காகவோ நான் இந்தக் கிராமத்திற்கு வரவில்லை. எனது 14 வருட கால அரசியல் வாழ்வில் இந்தக் கிராமத்திற்கும் பணியாற்ற வேண்டும் என்று என் மனச்சாட்சியை தொட்டுக் கேட்டவனாகவே நான் உங்கள் முன்னிலையில் வந்துள்ளேன்.

நமது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ சுயநல வேட்கைகளுக்காகவோ ஒரு சமூகத்தை பாழாக்கிவிட முடியாது. இன்று இங்கு வந்த பின்னரே, பல்வேறு பிரச்சினைகளை என்னால் நேரடியாக காணமுடிகின்றது.

புதிய வீடமைப்புத்திட்டத்தின் அருகே உள்ள பாலத்தையும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.

எருக்கலம்பிட்டி கிராம மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ  அல்லது நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனது கடந்த கால வெற்றியில் பங்களிப்பை நல்கியுள்ளார்கள். இதனை நான் ஒருபோதும் மறந்துவிட முடியாது என அவர் தெரிவித்தார்.
 நிறுவனத்தின் தையல் பயிற்சி நிலையம் சனிக்கிழமை (2) பாலமுனையில் திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .