2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ரூ. 1 மில்லியன் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது

Thipaan   / 2015 ஜூலை 01 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சட்டவிரோதமான முறையில் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளைக் கடத்திச் சென்ற இரண்டு வாகனங்களின் சாரதிகளை கிளிநொச்சி பகுதியில் வைத்து புதன்கிழமை (01)  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாங்குளத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற சிறிய கப்ரக வாகனத்தில் மறைத்து கொண்டுசெல்லப்பட்ட சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரந்திராந்திகள்  விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் சிக்கின.

வாகன சாரதியை கைது செய்த அதிரடிப்படையினர். திராந்திகளுடனான வாகனத்தையும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை, மாங்குளத்திலிருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை பாரவூர்தியில் மறைத்துக் கொண்டு சென்ற ஒருவரை, இயக்கச்சிப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பளைப் பொலிஸார் கைது செய்தனர்.

பாரவூர்தியையும் சாரதியையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .