2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கூட்டமைப்பினருடன் அரசியல் கைதிகள், காணாமல் போனோரின் பெற்றோர் சந்திப்பு

Gavitha   / 2015 ஜூலை 07 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

அரசியல் கைதிகள், காணாமல் போனோர் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோரின் பெற்றோர்கள், திங்கட்கிழமை (06) தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியாவில், தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கலந்துரையாடல் நடைபெற்ற நிலையிலேயே இந்த சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோரின் நிலைப்பாடுகள் தொடர்பாக கூட்டமைப்பு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் எனவும் இவர்களின் விடயங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், காணாமல் போனோரின் விடயங்கள் தொடர்பாக பெற்றோர்களிடம் உள்ள ஆதாரங்களை தொடர்பாகவும் கூட்டமைப்பின் தலைவர்களிடம் பெற்றோர்கள் காண்பித்திருந்தனர்.

இதேவேளை தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இவ்விடயங்கள் தொடர்பாக அதிகளவான கவனம் செலுத்தப்படும் என அவர்களிடம் கூட்டமைப்பின் தலைவர்களால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .