2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; நால்வர் படுகாயம்

Thipaan   / 2015 ஜூலை 18 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பம்மைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை(17) வவுனியாவில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்;கு சென்ற முச்சக்கரவண்டி மீது பம்பைமடு பகுதியில் இருந்து வந்த வான் ஒன்று மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் இ. ஜானகி என்பவர் பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .