2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நிரந்தர வைத்தியர்களை நியமிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2015 ஜூலை 24 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, கொக்கிளாய் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியரை நியமிக்கக்கோரி பிரதேச மக்கள் வெள்ளிக்கிழமை (24) காலை வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர வைத்தியர் இன்மையால் சிறிய நோய்களுக்குக் கூட தாங்கள் முல்லைத்தீவு வைத்தியசாலை அல்லது வெலிஓயா வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலையிலுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறினர்.

காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அங்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார், அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்ல பணித்ததுக்கிணங்க ஆர்ப்பாட்டம் 11 மணியளவில் முடிவுக்கு வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .