Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 24 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் சிறுபோக நெல்லை உரிய விலைகளில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தார்.
இம்முறை சிறுபோக செய்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யும் நெல்லை உரிய விலையில் விற்பனை செய்வதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அறுவடை செய்கின்ற சிகப்பு நெல்லு ஒரு மூடை 2 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவும் சம்பா போன்ற நெல்லினங்கள் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் தற்போது கொள்வனவு செய்யப்படுகின்றது. இதனால் செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் போதியளவு வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை செய்;யப்பட்டு வரும் நிலையில் நெல் கொள்வனவு தொடர்பாக மாவட்டச் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர் கூறியதாவது,
தற்போது அறுவடை செய்கின்ற நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் நெல் கொள்வனவு செய்யப்;படவுள்ளது.
முழங்காவில் வட்டக்கச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் களஞ்சியங்கள் திறந்து வைக்கப்;பட்டு நெல் கொள்வனவு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளில் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
அதாவது சம்பா ஒரு கிலோகிராம் 50 ரூபாய்க்கும் சிகப்பு நாடு ஒரு கிலோகிராம் 48 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago