2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் சுவரொட்டிகள் அகற்றல்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்கள் பொலிஸாரினால் அகற்றப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் சுற்றாடலுக்கு தீங்கான விடயங்களை மேற்கொள்ளலாகாது என்று தேர்தல்கள் ஆணையாளாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் பல இடங்களில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

பொலிஸார் இந்த சுவரொட்டிகளை உடனுக்குடன் அகற்றிய போதிலும் தேர்தல் வேட்பாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட  விசேட திட்டமொன்றையடுத்து, சுவரொட்டிகளை அகற்றி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .