2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

'இரணைமடுவில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது'

Thipaan   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தி, பாரதிபுரம் ஆகிய பகுதிகளில்; கஞ்சா மற்றும் போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாகவும், இதனால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இரணைமடுச் சந்தி மற்றும் பாரதிபுரம் 155ஆம் கட்டை பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் பாவனை அதிகரித்துள்ளதுடன், அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகின்றனர்.

இருந்தும், அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .