2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி விபத்து

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று, செவ்வாய்க்கிழமை (11) ஆனையிறவு பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியதில் லொறியின் சாரதி காயமடைந்துள்ளார்.

சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால், வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சாரதி, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .