2025 ஜூன் 21, சனிக்கிழமை

வவுனிக்குள வாய்க்காலைபுனரமைக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவிலுள்ள வவுனிக்குளத்தின் இடதுகரை வாய்க்காலின் இரண்டு பக்கங்களையும் பாதுகாக்கக்கூடிய வகையில் கொங்கிரீட் வாய்க்கால் அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களின் ஒன்றான வவுனிக்குளம், கடந்த 2013ஆம் ஆண்;டு 600 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.

குறித்த குளத்தின் நீரேந்துப்பிரதேசம் அதிகரிக்கப்பட்டமை, அணைக்கட்டு கலிங்கு ஆகியன உயர்த்தப்பட்டதுடன் நீர்விநியோக வாய்க்கால், கழிவு வாய்க்கால்கள், நீர்ப்பாசன வாய்க்கால்கள் என்பனவும் புனரமைக்கப்பட்டன. அத்துடன், குளத்தில் இடதுகரை வாய்க்காலில் மண்ணரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் இரு பக்கமும் கொங்கிறீட் இட்டு புனரமைக்கப்;பட்டுள்ளது.

சில பகுதிகளில் ஒரு பகுதிக்கு மாத்திரமே கொங்கிறிட் இடப்பட்டுள்ளது. எனவே, மண் அரிப்பை தடுக்கும் வகையில் இரண்டு பக்கமும் கொங்கிறீட் சுவர்களை அமைத்து குளத்தின் கீழான எஞ்சிய நீர்ப்பாசன வாய்க்கால்கள், நீர்ப்பாசன வீதிகள் உள்ளிட்ட கட்டுமானங்களை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .