2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 32 பேர் கைது

Janu   / 2024 மார்ச் 21 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை  கடற்பரப்பிற்குள் நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 32 இந்திய மீனவர்கள் ,  ஐந்து விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

தமிழக மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு கடற்பரப்பில் மூன்று படகுகளுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்கள் மற்றும்  மன்னார் கடற்பரப்பில் இரண்டு  விசைப்படகுகளுடன்  மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்களே  இவ்வாறு கைது  செய்யப்பட்டு  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கும்  ,மன்னார் கடற்படை முகாமிற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் 32 பேரும்  5 படகுகளுடன்  சிறைபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மன்னார் மற்றும் யாழ்பாணம்  மீன்வளத்துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை  (21) ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X