Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 மார்ச் 19 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ்குமார ஆரியரத்னா பொலிஸ் உத்தியோகத்தர் விதான ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) புதையல் தோண்டிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் தொலைபேசி ஆய்வு விசாரணைகளின்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புதையல் தோண்டியவர்களுடன் தொலைபேசியில் உரையாடல் மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இருவரும் தமது கடமைகளைப் பொறுப்பேற்கச் செல்லவில்லை.
இதனையடுத்து இன்று (19) அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சுபாஸ்குமார ஆரியத்தனா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் விதான ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை புதையல் தோண்ட முற்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago