2025 ஜூலை 09, புதன்கிழமை

கோடா, உடும்பு இறைச்சி வைத்திருந்தவருக்கு அபராதம்

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில், 240 போத்தல் கோடா, உடும்பு இறைச்சி என்பவற்றை,  வைத்திருந்த நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்த, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில் செல்ல அனுமதியளித்தார்.

விசேட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸார், குறித்தநபரை புதன்கிழமை கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது, உடும்பு இறைச்சி வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன், கோடா வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அடுத்த வழக்கு விசாரணை, மே மாதம் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .