2025 ஜூலை 09, புதன்கிழமை

காணி அனுமதிப்பத்திரம் விரைவில் வழங்கப்படும்

George   / 2017 ஜனவரி 05 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் காணி உறுதிப்படுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென, மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும், இதுவரை தமக்கு காணி அனுமதிப்பத்திரம் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் காணி அனுமதிப்பத்திரம் வழங்க  உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொன்னகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில், மாவட்ட செயலாளரிடம் கேட்டபோது,  “கிராமத்தில் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு, காணியற்றவர்களுக்கு காணி அனுமதிக் கடிதம் வழங்கப்பட்ட  பின்னரே, வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன

காணி உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட அனைவருக்கும் காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள்  விரைவில் வழங்கப்படும்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .