2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவிலும் போராட்டம்

George   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி, பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில், வியாழக்கிழமை இடம்பெற்றது.

வவுனியா நகரசபை முன்றலில் ஆரம்பமான இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பிரஜைகள் குழுவின் தலைவர் தேவராசா, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.டி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ், எம்.தியாகராசா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வன்னி அமைப்பாளர் எஸ்.கோவிந்தராஜ், புதிய மாக்கிசிஸ லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் பெற்றோர், காணாமல் போனோரின் பெற்றோர் உட்பட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், வரியிறுப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X