2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில், குடும்பஸ்தரை ஒருவரை இன்று சனிக்கிழமை (03) கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உ.கௌசிகன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமன்னார் கிராமம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .