2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடன் அட்டையை திருடி நகை வாங்கிய இளம் பெண்

Freelancer   / 2023 ஜூன் 03 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் கடன் அட்டையை திருடி அதன்மூலம் தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேக நபர்,  அட்டையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 2 வளையல்கள், 1 செயின் மற்றும் 2 காதணிகள் உட்பட பல தங்க நகைகள் மற்றும் பல பொருட்களை அடகு வைத்த ரசீது ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .