2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் காயம்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்ரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு  நட்டாங்கண்டல் கொம்பு வைத்த குளம் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு  மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட   நட்டாங்கண்டல் கொம்பு வைத்த குளம் பகுதியில் வயலுக்குச் சென்று திரும்பிய குடும்பஸ்த்தர்  ஒருவர் கட்டுத்துவக்கில் சிக்கி காலில் காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதுடன்  கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் நட்டாங்கண்டல்  பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X