Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 மே 09 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் - மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தச்சனா மருத மடு பகுதியில் நபர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் வெடி பட்டு மரணம் அடைந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் நான்கு சந்தேக நபர்கள் கடந்த 03 மாதம் 25ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
குறித்த வழக்கானது நேற்று (8) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் குறித்த மரணம் இறந்த நபரின் கவனக்குறைவினால் ஏற்பட்டதாக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட முதல் அறிக்கையை, மேற்கொள்காட்டி சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகி சட்டத்தரணி செ.டினேசன் சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது
அதனை தொடர்ந்து வழக்கில் மடு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட கடந்த கால அறிக்கை மற்றும் சாட்சிகளின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் குறித்த நான்கு சந்தேக நபர்களும் வழக்கிலிருந்து மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை தொடர்பான வழக்குகளில் மேல் நீதிமன்றத்தின் ஊடாகவே பிணை வழங்கப்படுகின்ற நிலையில் குறித்த வழக்கில் விசேட காரணங்களின் அடிப்படையில் நீதவான் நீதிமன்றத்தால் சந்தேக நபர்கள் விடுவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago