2025 ஜூன் 04, புதன்கிழமை

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறுவர்கள்

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் கூடுதலான சிறுவர்கள் சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் வெட்டுதல் போன்ற ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டு​மென, கிராம மட்ட அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லாத நிலை காணப்படுவதாகவும், இவ்வாறான தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதேச பொதுஅமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, தேவிபுரம் 'அ' பகுதியில் வெளியிடங்களிலிருந்து வரும் நபர்களால் கசிப்பு உற்பத்தி விற்பனை, கஞ்சா போதைப்பொருள் பாவனைகள் என்பன அதிகரித்துக் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ள மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், இவ்வாறான செயற்பாடுகளால் பெண்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சிறுவர்கள் பாதிப்புக்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .