Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
சர்வதேச விசாரணை முடிந்துவிட்டதாக கூறுவது வேதனையளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகனை கௌரவிக்கும் நிகழ்வு, புதன்கிழமை வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள முத்தையா காலசார மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
"மாகாணசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற செய்த அனைத்து மக்களுக்கும் நன்றிகள். கடந்த 30 வருட காலத்தில் ஏற்பட்டிருக்கின்ற சொத்தழிவுகள், உயிரிழப்புகள், காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விவகாரம், மீள்குடியேற்றம், காணி விவகாரம் போன்ற அனைத்தும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு சவால்மிக்க பணிகளாக அமையப்போகின்றன.
ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். இந்த தேசிய அரசாங்கம் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரு காத்திரமான பணியை முன்னெடுக்கும் என நம்புகின்றேன்.
எமது அன்றாட பிரச்சனைகளிலிருந்து நிரந்தர தீர்வை, நிரந்தரமான அபிவிருத்தியை காண்பதற்காக இன்னும் நாங்கள் மிகக் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. நாங்கள் ஒன்றுசேர்ந்து உழைக்கின்ற போதுதான், அவ் இலக்கை அடையமுடியும்.
இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக, சர்வதேச விசாரணை கோரியே தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் எங்களில் சிலர், சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்தவிட்டதாக கூறுகின்றனர். மீண்டும் சரவதேச விசாரணை எதற்கு என மக்களை குழப்புகின்றனர். இவ்வாறான கருத்துக்கள் மன வேதனையளிக்கிறது' என்றார்.
'தமிழ் மக்களை கொலை செய்தவர்களே விசாரணை செய்தால் எமக்கு நீதி கிடைக்காது. மஹிந்த ராஜபக்ச காலத்திலே விசாரணை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. அவ் ஆணைக்குழுவின் அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளள. எந்த நீதியும் வழங்கப்படவில்லை. கடந்த 60 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்படவில்லையென்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளோம்.
யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை கணவன்மார்களை தேடித்திரிகிறார்கள். இவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தவேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது பலமான கட்சியாக மாற்றம் பெற, பதிவுசெய்யப்பட வேண்டும். அதற்காக குரல் கொடுக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கென, யாப்பு இல்லை, பலமான கட்டமைப்பு இல்லை. கூட்டமைப்பின் பேரால் ஒரு கட்சி, தன்நலன்சார்ந்து செயல்படுவது தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் மனக்கசப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது பதிவுசெய்யப்பட வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்த வேண்டும்' என குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
24 minute ago
40 minute ago