2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தைப்பொங்கல் விழா

Freelancer   / 2023 ஜனவரி 19 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகன் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பொங்கல் விழா, செவ்வாய்க்கிழமை (17) சிறப்பாக நடைபெற்றது.

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தினை கொண்டாடும் நிகழ்வாக இந் நிகழ்வு அமைந்தது. இதன்போது அலுவலக முன்றலில் பொங்கல் பொங்கிப் படைத்து விழா சிறப்பிக்கப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.கனகேஸ்வரன் (நிர்வாகம்) மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), உதவி அரசாங்க அதிபர் லிசோ கேகிதா மற்றும் சிரேஸ்ட  பதவிநிலை உத்தியோகத்தர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .