2025 ஜூலை 09, புதன்கிழமை

புங்குடுதீவு மாணவி விவகாரம்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Administrator   / 2017 ஜனவரி 05 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிப்பதாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன், இன்று உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு விசாரணை, ஊர்காவற்துறை நீதவான் நீதமன்றில், பதில் நீதவான் முன்னிலையில் இன்று நடைபெற்றபோது, 12 சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மாணவி 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .