Freelancer / 2022 மே 09 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - முள்ளியவளை, கணுக்கேணி கிழக்குப் பகுதியில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து மரணடைந்துள்ளார்.
இவர் வீட்டு காணியில் இருந்த பலாமரத்தில் ஏறிய நிலையில், தவறி விழுந்துள்ளார்.
சம்பவத்தில் 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .