2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

George   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த், எஸ்.றொசேரியன் லெம்பேட்
 
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்; பிரிவக்குட்பட்ட இலுப்பக்கடவை ஏ-32 வீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தினுள் இருந்து ஆணின் சடலம், வெள்ளிகிழமை (16) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கபட்டவர் இராசதுறை நாகேஸ்வரன் (47) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு இவர் இறந்திருக்கலாம் என தெரிவிக்கபடுகிறது.

இவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை, சம்பவ இடத்துக்குச் சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி, டி.சிந்தாத்துரை, சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும்படி கூறினார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .