2025 ஜூன் 02, திங்கட்கிழமை

பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் சாரதி காயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

உடுப்புக்குளம் பகுதியில் வைத்து, நேற்று (22) இரவு 7.30 மணியளவில், தனியார் பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு - தங்காலை வழிப் போக்குவரத்து பஸ் மீதே,இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பஸ் சாரதி காயங்களுக்கு இலக்கான நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X