2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பில் எவ்வித எரிபொருளும் இல்லை

Princiya Dixci   / 2022 மார்ச் 27 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டிசலுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. வாகன ஓட்டிகள் டீசலை பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த  23ஆம் திகதி தொடக்கம் இன்று வரையும் எதுவித எரிபொருள்களும் இல்லாத நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் செல்ல முடியாதவாறு கயிறு கொண்டு இழுத்துக் கட்டப்பட்டுள்ளது.

மண்ணெண்ணைய், பெற்றோல் மற்றும் டிசல் அனைத்தும் தீர்ந்துள்ள நிலையில் எப்போது வரும் என்று தெரியா நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் வாகனங்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .