2024 மே 04, சனிக்கிழமை

பூஜைக்கு வந்த பெண்ணிடம் நகை அபகரிப்பு

Editorial   / 2023 ஜூன் 28 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி மீனாச்சி அம்மன் கோவிலில் பூஜையில் கலந்து கொண்ட 70 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் கோவில் மைதானத்தில் யாகம் செய்து கொண்டிருந்த போது அங்குவந்த கொள்ளையன் பெண்ணின் தங்க நகையை ​அபகரித்துச் சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .