சண்முகம் தவசீலன் / 2018 ஜூன் 08 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அடிப்படை மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கும் நடமாடும் சேவை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மற்றும் யாழ்ப்பாண அலுவலகங்கள் இணைந்து எதிர்வரும் 12ஆம் 19ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சேவைகளை பெற்றுக்கொள்வதோடு அடிப்படை மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் என்பவற்றையும் பெற்றுக்கொண்டு பயனடையுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான வசந்தராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .