2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் இல்லை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச மருத்துவமனையில் கடந்த ஒருமாத காலமாக நிரந்தர மருத்துவர் இல்லாததன் காரணமாக நோயாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். 

வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், கோணாவில், யூனியன்குளம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைதிபுரம், ஆரோக்கியபுரம், கோட்டைக்கட்டியகுளம் மற்றும் அம்பலப்பெருமாள்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 4,000 வரையான குடும்பங்கள் இம் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம்மருத்துவமனையில் பணிபுரிந்த இரு நிரந்தர மருத்துவர்களும் அண்மையில் இடமாற்றம் பெற்றுச்சென்றதையடுத்து கிளிநொச்சி பொது மருத்துவமனையிலிருந்து இம்மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பணிக்காக வந்து செல்கின்றனர். 

எனினும், சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் சிலவேளைகளில் கிழமை நாட்களில் கூட மருத்துவர்கள் இங்கு பணிக்கு வருவதில்லையென நோயாளர்களினால் தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக விபத்துக்கள், மகப்பேறு, பாம்புக்கடி மற்றும் காட்டு விலங்குகளினால் பாதிக்கப்படுவோர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். 

அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் நியமிக்கவேண்டுமென இப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் மாவட்டச் செயலாளருக்கு மனு கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X