2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு; வவுனியாவில் சம்பவம்

Freelancer   / 2022 மே 31 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து  16 வயதுடைய சிறுமி  ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள்  கண்டெடுக்கப்பட்டன. 

குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X