Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 மே 14 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னார் - செளத்பார் பகுதியில் மீன் பிடிப்பதற்காக வலை பாய்ச்ச சென்ற இளம் குடும்பஸ்தரான மீனவர், எதிர்பாராத விதமாக புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்து காணாமல் போன நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த இளம் கு டும்பஸ்தரான கிரிஸ்தோபர் ஜாக்லின் வயது-29 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (13) மதியம் கடலுக்குள் விழுந்த நிலையில், உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் குறித்த நபர் மீட்கப்படாத நிலையில், இன்றைய தினம் காலை தொழிலுக்குச் சென்ற மீனவர்களினால் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago
8 hours ago