2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முள்ளிவாய்க்காலில் துப்பாக்கிகள் மீட்பு

Freelancer   / 2023 ஜனவரி 20 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி  ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது கிணற்றில் இருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கிய தகவலையடுத்து
குறித்த பகுதிக்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிகளை மீட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.

குறிப்பாக பழுதடைந்த துருப்பிடித்த நிலையில் இருந்த  ஏ.கே துப்பாக்கி ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றுமே  மீட்கப்பட்டுள்ளது.

இதனை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .