Princiya Dixci / 2022 மே 16 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான கிறிஸ்டி குகராஜாவின் (குகன்) 23வது நினைவு தினம், வைரவப்புளிங்குளம் `யங் ஸ்ரார்` விளையாட்டு மைதானத்துக்கு முன்பாகவுள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் நேற்று (15) நடைபெற்றது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அன்னாரது தூபிக்கு மலர்மாலை அணிவித்து, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
17 minute ago
33 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
6 hours ago