2024 மே 17, வெள்ளிக்கிழமை

வீட்டின் இரும்பு படலை சிறுவனுக்கு எமனானது

Editorial   / 2023 ஜூன் 14 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டின் இரும்புப் படலை, சிறுவன் மீது வீழ்ந்ததில் அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் புதன்கிழமை (14) காலை  இடம்பெற்றுள்ளது.

கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த மூன்று அகவை நிரம்பில ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன் வீட்டு படலையில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு படலை) சிறுவன் மீது வீழ்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவனின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின்னர்  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவனின் உயிரிழப்பு கேப்பாபிலவு கிராமத்தில் பெரும்சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது சரியான அக்கறை கொண்டு செயற்படவேண்டும் தற்போது வடக்கு மாவட்டங்களில் அதிகளவில் சிறுவர்கள் உயிரிழப்பு சம்பவம் பதிவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செ.கீதாஞ்சன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .