2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இவர்கள் மனதில் நல்ல எண்ணம் இல்லை!

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெருவில் இருவர் ஆக்ரோஷமாகக் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் அதனை சுவாரஸ்யமாக ரசித்த வண்ணமிருந்தனர். கூட்டத்தில் இருந்த ஒருசிலர், சண்டையில் பலமாக அடிவாங்கியவரை வெகுவாக மனதில் இரசித்தபடி இருந்தனர். ஏனெனில், அடி வாங்கியவர் இவர்களின் எதிரியாக இருக்கலாம். 

சற்று நேரத்தில் யாரோ ஒருவர் வந்து, சண்டையை விலக்கிவிட எத்தனிக்க, தாக்கிக்கொண்டு இருந்தவர் விலக்குப்பிடிக்க வந்தவரையும் தாக்க, முடிவில் பொலிஸார் வந்து அந்த மூவரையும் அழைத்துச் சென்றனர்.

இந்த அரிய போர்க் காட்சியை, இந்தப் பொலிஸார் கெடுத்து விட்டார்களே என மனதில் நொந்தபடி பார்வையாளர்கள் கூட்டம் கலைந்தது.  

சிலருக்கு சண்டை என்றால் சந்தோசம். தாக்கப்படுவது அவர்கள் அல்லவே! சமூகச் சீர்கேடு, அமைதியின்மை பற்றி ஆராய இவர்களுக்கு மனதில் நல்ல எண்ணம் இல்லை! மன த்தூய்மை தீயோருக்கு கிடையாது!  

 

வாழ்வியல் தரிசனம் 06/10/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்  


  Comments - 0

  • kiruba Thursday, 16 February 2017 06:08 AM

    உண்மை.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .