2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இவர்களின் தேடல் என்ன?’

Editorial   / 2018 மார்ச் 20 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரசாரமான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது, சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கிக்கொண்டிருப்பதை, தொலைக்காட்சியில் அவ்வப்போது காட்டிக்கொண்டிருப்பார்கள். 

விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விவாதம் சுவாரஷ்யமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இளைஞன் ஒருவன், அலைபேசியில் எதையோ பார்த்தபடி இருந்தான்.  

உரையைக் கேட்ட சிலர், எழுந்து கேள்விகளைக் கேட்டு, தங்கள் சந்தேகங்களை நீக்கிக் கொண்டார்கள். ஆனால், அந்த இளைஞனோ, சபையை நோக்கி, எல்லாம் புரிந்ததுபோல், சிரித்து, தலையை அசைத்தான். மீண்டும் அலைபேசியில் சிக்குண்டான்.  

விவாதமுடிவில், சபையினருக்கு ஒரு குறிப்புத்தாள் வழங்கப்பட்டது. எல்லோரும் எழுத, இவன் மட்டும் ‘திருதிரு’ என விழித்து, பக்கத்தில் உள்ளவர்களைச் சுரண்டி, விவரம் கேட்டு நச்சரித்தான். விரிவுரைகளைக் கேட்காதவனுக்கு எதைத்தான் புரியவைப்பது. 

இத்தகைய நடிகர்கள், வீட்டிலேயே இருந்திருக்கலாம். இவர்களின் தேடல் என்ன?  

வாழ்வியல் தரிசனம் 20/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .