2026 மார்ச் 28, சனிக்கிழமை

ஐ.நா வதிவிட பிரதிநிதியுடன் சந்திப்பு

Mayu   / 2026 மார்ச் 26 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வசிவிடபிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான விசேட கலந்துரையாடல் இன்று (26) யாழ். பொஸ்ட் விடுதியில் இடம் பெற்றது.

இவ் விசேட கலந்துரையாடலானது இன்று (26) காலை 10 :30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்றது 

மற்றும் இவ் கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சம கால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிர் கால அரசியல் நகர்வுகள் மற்றும் சம கால அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடபட்டது 

இவ் கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தர்சன் மற்றும் சமத்துவக் கட்சி தலைவர் சந்திரகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

பூ.லின்ரன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .