2025 மே 15, வியாழக்கிழமை

திறன் விருத்தி பயிற்சி

Janu   / 2023 ஜூலை 11 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்  

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களின் உள மற்றும் ஆளுமையை மேம்படுத்தும் முகமாக மாவட்ட செயலக பயிற்சிப் பிரிவினால் " சுய மற்றும் சமூக நிலை ஆய்ந்து நோக்கலும் ஒன்றிணைத்தலும் " (Self and Social Introspection and Integration) எனும் தலைப்பில் யோகா மற்றும் அரங்காற்றுகையுடன் இயைந்த இரு நாட்கள் கொண்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் செவ்வாய்க்கிழமை (11) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை ஆரம்பமானது. 

இப் பயிற்சி நெறியின் வளவாளராக பிரபல நாடகம் மற்றும் அரங்காற்றுகை கலைஞரும்  எழுத்தாளருமான பூபாலசிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்.

பயிற்சி ஆரம்ப நிகழ்வில் மாட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட செயலக ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .