Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Janu / 2023 ஜூலை 19 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது செவ்வாய்க்கிழமை (18) இரவு 09: 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதுடன், வீட்டில் இருந்த குடும்ப பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முகங்களை கறுப்பு துணியால் மூடி கட்டியவாறு , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல், ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி , வீட்டினுள் சென்று , அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி பெற்றோல் குண்டு வீசியுள்ளது.
அதன் போது , வீட்டில் இருந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 42 வயதான பெண்ணொருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு , அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சத்தம் கேட்டு விரைந்த அயலவர்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அச்சுவேலி பொலிஸாருக்கும் அறிவித்தனர்.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025