Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 16 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
க.பொ.த உயர் தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் சிந்தியடைந்த இரண்டாயிரம் பேரை மத்திய அரசாங்க கல்வி அமைச்சில் இணைத்து, ஆசிரியர் நியமனம் வழங்கும் திட்டத்தில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை நேற்று வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தார்.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது, இவ்விடயம் தொடர்பிலான தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'நமது நாட்டில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், க.பொ.த உயர்தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் சித்தி அடைந்துள்ள 2,000 பேரை மத்திய கல்வி அமைச்சில் இணைத்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி, அவர்களை பட்டதாரிகளாக்குவதற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளர். இந்த 2,000 பேரும் பட்டங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களாக பாடசாலைகளுக்கு நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
எனவே, இத்திட்டதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதனூடாக கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வு காண முடியும். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், இறக்காமம், லவுகல, பதியத்தலாவ, தெஹியத்தகண்டி, மஹா ஓயா, நாவிதன்வெளி, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, பட்டிருப்பு மட்டக்களப்பு மேற்கு, திருகோணமலை மாவட்டத்தில் சேருவலை, கந்தளாய், மூதூர், குச்சவெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய அரசாங்க கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர்களிடம் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுக்க வேண்டும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
12 minute ago
39 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
39 minute ago
1 hours ago
3 hours ago