Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று மணித்தியாலங்கள் வரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், இன்றைய தினம் விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டிருந்த போதே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த சம்பவம் இடம்பெற்ற போது, நாட்டில் இராணுவத் தளதியாக இருந்த, தற்போதைய அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் விசாரணைகளை மேற்கொள்ள, குற்றப் பலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .