Editorial / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு, இரண்டுவார காலத்துக்கு வெளிநாடு சென்று வர, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20), அனுமதி வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி, 21 மில்லியன் ரூபாவுக்கு விற்பனைச் செய்து நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, இன்று (20), விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரித்தானியா சென்றுவர, கம்மன்பில நீதிமன்றில் முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நீதிமன்றம், அவருக்கு 2 வாரங்கள் வரை வெளிநாடு சென்றுவர அனுமதியளித்துள்ளது.
5 hours ago
8 hours ago
8 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
17 Apr 2026